sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 போலீஸ் டைரி

/

 போலீஸ் டைரி

 போலீஸ் டைரி

 போலீஸ் டைரி


ADDED : ஜன 18, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 18, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குட்கா வைத்திருந்தவர் கைது: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் போலீசார் சோதனை செய்த போது, சந்தேகப்படும் வகையில் இருந்த பாலசுதர்சன், 42, என்பவரை சோதனையிட்டனர். அவரிடம் 4.5 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. போலீசார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.

l திருப்பூர் தெற்கு போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனை செய்த போது, நிமாஸ் ரைட், 18 என்பவர் 480 கிராம் எடையுள்ள குட்கா பாக்கெட்டுகளுடன் பிடிபட்டார். அதைப் பறிமுதல் செய்த போலீசார் அந்நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மது பாட்டில் பதுக்கியவர் கைது நல்லுார் போலீஸ் எல்லைக்குட்பட்டகே.செட்டிபாளையம் பகுதியில், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனையிட்ட போலீசார், கந்தசாமி, 50, என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து, 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்தபோலீசார் அவரை கைது செய்தனர்.

ஒயர் திருட்டு: இருவர் கைது: திருமுருகன்பூண்டி அருகேயுள்ள முருகம்பாளையத்தில், போர்வெல் கிணற்றிலிருந்து மோட்டார் ஒயர் திருடப்பட்டது. விசாரணையில், ஒயர் திருடியது, கார்த்தி, 37 மற்றும்கேசவபிரசாத், 21 என்பது தெரிந்து, இருவரையும் திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ எடையிலான ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us