ADDED : ஜன 02, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார், பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.