sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவிக்கு கொடுமை போலீஸ்காரர் கைது

/

மனைவிக்கு கொடுமை போலீஸ்காரர் கைது

மனைவிக்கு கொடுமை போலீஸ்காரர் கைது

மனைவிக்கு கொடுமை போலீஸ்காரர் கைது


ADDED : ஜூன் 15, 2025 04:01 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில், மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய போலீஸ்கார கணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், ராம் நகரை சேர்ந்தவர் காமராஜ், 35; வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். புதுவையை சேர்ந்த நந்தினி, 23 என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக மதுபோதையில் வீட்டுக்கு திரும்பும் அவர், மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மனைவி தரப்பில் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. காமராஜை உயரதிகாரிகள் அழைத்து அறிவுரை கூறி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இரு நாட்கள் முன்பு, மதுபோதையில் சென்ற அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மனைவி அளித்த புகாரின் பேரில், காமராஜ் மீது கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us