sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழை நீரை சேகரிக்க முடியாத குளங்கள்; ஆய்வு செய்ய கோாிக்கை

/

மழை நீரை சேகரிக்க முடியாத குளங்கள்; ஆய்வு செய்ய கோாிக்கை

மழை நீரை சேகரிக்க முடியாத குளங்கள்; ஆய்வு செய்ய கோாிக்கை

மழை நீரை சேகரிக்க முடியாத குளங்கள்; ஆய்வு செய்ய கோாிக்கை


ADDED : அக் 03, 2024 11:57 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தண்ணீரின்றி குளங்கள் வறண்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழைக்கு முன், மழை நீரை சேகரிப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 118, குளம், சிறிய குட்டைகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஏழு குளங்களுக்கு மட்டும், திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், தண்ணீர் வழங்கப்படுகிறது.

பிற குளங்களுக்கு, மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரே முக்கிய நீர்வரத்தாக உள்ளது; நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன. பி.ஏ.பி., பாசனப்பகுதியிலுள்ள குளங்களில், மழைக்காலத்தில், பாசன நீரை தேக்கி வைக்கின்றனர்.

இவ்வாறு, கிராமப்புறங்களில், மழை நீர் சேகரிப்புக்கும், நிலத்தடி நீர் மட்டத்துக்கும் உதவியாக இருக்கும் குளங்கள், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குடியிருப்புகளில் இருந்து, குளங்களுக்கு மழை நீர் வரும் வரத்து ஓடைகள், ஆக்கிரமிக்கப்பட்டும், துார்வாரப்படாமலும் உள்ளன.

மேலும், முழு கொள்ளளவில், தண்ணீர் தேக்க முடியாத அளவுக்கு, கரைகள் வலுவிழந்து பரிதாப நிலையில் உள்ளன. இதனால், குறுகிய காலத்தில், தண்ணீர் வற்றி, குளங்கள் பரிதாப நிலையில் காணப்படுகின்றன.

தற்போது, உடுமலை ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான குளங்களில், தண்ணீர் இல்லை. வடகிழக்கு பருவமழை சீசனிலேயே அதிக மழைப்பொழிவு உடுமலை பகுதிக்கு கிடைக்கிறது. எனவே, இந்த சீசனில் கிடைக்கும் மழை நீரை முழுமையாக சேகரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, 'ஜல் சக்தி அபியான்' மற்றும் தமிழக அரசின், குடிமராமத்து திட்டத்தின் கீழ், துார்வாரி சீரமைக்கப்பட்ட, 35க்கும் மேற்பட்ட குளங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

பிற குளங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நீர் வரத்து ஓடைகளை துார்வாரி, கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

குளங்கள் குறித்து, தொடர் கண்காணிப்பு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதால், கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்; கிணற்று பாசன சாகுபடி பரப்பும் அதிகரிக்கும்.

எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us