sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொங்கல் - 2 பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'  

/

பொங்கல் - 2 பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'  

பொங்கல் - 2 பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'  

பொங்கல் - 2 பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'  


ADDED : ஜன 12, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 12, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூரில் நேற்று காலை முதல் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகரித்தது.

கோவையில் இருந்து திருப்பூர் வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி பாசஞ்சர், கோவை மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். ஈரோடு, சேலம், கரூர் வழியாக செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், பிளாட்பார்மில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் காலை சற்று கூட்டம் குறைவாக இருந்தது. மதியத்துக்கு பின் அதிகமானது. மாலை மற்றும் இரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் ஏற திரண்டனர்.

அதிகளவு சிறப்பு பஸ் இயக்கம் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் என்பதால், காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழையும் பஸ்சில் முண்டியடித்து சிலர் ஏறினர். இன்று தான் பயணிகள் எண்ணிக்கை சிறப்பு பஸ்களில் முழு அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைபாஸ் வரை தான்

சுரேஷ்திண்டுக்கல்லுக்கு போதிய அளவில் சிறப்பு பஸ் இல்லை. மதுரை செல்லும் சிறப்பு பஸ்களில் ஏறிச்சென்றால் பாதி வழியில் பைபாஸில் இறக்கி விடுவர். அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் செல்ல வேண்டும். எந்த பகுதிக்கு பஸ் இல்லை என்பதை கண்காணித்து அதற்கேற்ப பஸ் இயக்க வேண்டும்.----போலீஸ் இல்லைநதியாமதுரைக்கு செல்ல இரண்டு மணி நேரமாக பஸ் இல்லை. பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் நுழையும் முன்பே பஸ் ஏறி விடுகின்றனர். போலீசார் கண்காணிப்பதில்லை. உள்ளே நிற்கும் பெண்கள், முதியவர்கள் பஸ் ஏற முடியாத நிலை உள்ளது. எந்தெந்த பஸ் எங்கு நிற்கிறது என்பதற்கான அறிவிப்பும் இல்லை. ---








      Dinamalar
      Follow us