தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது!

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது!

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது!


ADDED : ஜன 09, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.

தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாநில அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்தது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியன அடங்கிய தொகுப்பு நேற்று கார்டுதாரர்களுக்கு வழங்கும் திட்டம் துவங்கியது. சென்னையில் முதல்வர் இத்திட்டத்தை துவங்கி வைத்ததையடுத்து, பல்லடம், கே.அய்யம்பாளையம் ரேஷன் கடையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மண்டல மேலாளர் ரகுநாதன், துணை பதிவாளர் தேவி பங்கேற்றனர். மாவட்டத்தில் 7.99 லட்சம் கார்டுகளுக்கு இதனை வழங்கும் வகையில், 799 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரையும், தேவையான அளவு கரும்புகளும் கொள்முதல் செய்ய, 2.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைகளில் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தினமும் 250 பேர் என்ற அளவில் இத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

* திருப்பூர் மாநகராட்சி, 49வது வார்டு, பாரதி நகர், ஆர்.கே., கார்டன் உள்ளிட்ட பகுதி ரேஷன் கடைகளில் மேயர் தினேஷ்குமார், பொங்கல் பரிசு வழங்கி துவக்கி வைத்தார். அதேபோல் நகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினர்.

* திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியிலுள்ள, 11 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசுத்தொகுப்பினை திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நகர தி.முக., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், நடராஜன் கமலக்கண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் பாட்ஷா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

வெயிலால் மக்கள் அவதி

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று திருப்பூர் பகுதி ரேஷன் கடைகளில் துவங்கியது. இதற்கான டோக்கன்கள் ஏற்கனவே உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் பயனாளிகள் கடைகள் முன் வரிசையில் நின்று இதைப் பெற்றுச் சென்றனர். நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் இடம் பெறவில்லை. இதனால், இதை வாங்குவதில் பல இடங்களில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில ஊரகப் பகுதிகளில் டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று இவற்றை வாங்கிச் சென்றனர். சில இடங்களில் வயதானர்வகள் கடும் வெயிலில் சிரமத்துடன் வரிசையில் காத்திருந்தனர். நிழல் தரும் வகையில் பந்தல் போன்ற ஏற்பாடு செய்யப்படாமல் சிரமம் நிலவியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us