ADDED : அக் 24, 2025 12:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சமீபத்தில் திருப்பூரில் பெய்த கனமழையால், நொய்யல் வீதி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது.
இதனால் சேறும் சகதியும் சேர்ந்து, மாணவர்கள் நடக்க சிரமப்படுகின்றனர். மேலும், கொசுக்கள் அதிகரிக்கும், நோய் பரவும். எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனே அகற்றவும், இனிமேலும், மழைநீர் தேங்காவண்ணம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

