sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1,200 ரூபாயில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் நடத்தும் தபால் துறை

/

ரூ.1,200 ரூபாயில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் நடத்தும் தபால் துறை

ரூ.1,200 ரூபாயில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் நடத்தும் தபால் துறை

ரூ.1,200 ரூபாயில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் நடத்தும் தபால் துறை


ADDED : ஜூன் 12, 2025 05:12 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் தபால் நிலையங்களில், 1,200 ரூபாயில், ஆண்டுக்கு பத்து மற்றும் 15 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:

அனைத்து தரப்பு மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிக குறைந்த பிரிமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வசதி, போன் மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெறும் வசதி உள்ளிட்ட பல பயன் உள்ளது. 18 முதல், 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை விரிவான தபால் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வரும், 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us