/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை கடத்தல் வதந்தி: தபால் ஊழியர் கைது
/
குழந்தை கடத்தல் வதந்தி: தபால் ஊழியர் கைது
ADDED : மார் 17, 2024 01:13 AM
திருப்பூர்;தாராபுரத்தில், குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பிய தற்காலிக தபால் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள மூலனுாரில் நேற்று முன்தினம் சமூக வலைதளங்கள் (வாட்ஸ் ஆப், பேஸ்புக்) குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர் என கூறி, மதுபோதையில் இருந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் தாக்கிய வீடியோ பகிரப்பட்டு வந்தது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். தவறான வீடியோவை மக்கள் மத்தியில் பகிர்ந்து வதந்தி பரப்பி பதட்டத்தை ஏற்படுத்தியது தெரிந்தது. தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், வீடியோவை பகிர்ந்த மூலனுாரில், தற்காலிக தபால் ஊழியராக பணிபுரியும், அறிவழகன், 34 என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலியான வதந்திகளை, அதன் உண்மை தன்மை பற்றி அறியாமல் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும், அவ்வாறு பகிரும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பர். அனைத்து சமூக வலைதளங்களையும் மாவட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்றனர் போலீசார்.

