ADDED : மார் 28, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலூர்: கொடுவாய் - -பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோட்டை பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டுடன் இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. இவ்வழியே போக்குவரத்து அதிகம் உள்ளது. அதில், பொங்கலுார் - வடமலை பாளையம் அருகே நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த பள்ளத்தை மூடாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.