/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் சர்ச்களில் ஹிந்தியில் பிரார்த்தனை
/
திருப்பூர் சர்ச்களில் ஹிந்தியில் பிரார்த்தனை
ADDED : டிச 25, 2024 11:44 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 21 மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பின்னலாடை தொழிற்சாலைகளில் மட்டும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வடமாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்களுக்காக, திருப்பூர் கத்ரீனாள் சர்ச் உட்பட பெரும்பாலான சர்ச்களில், சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. வட மாநில மக்கள், புத்தாடை அணிந்து பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
ஹிந்தி மொழியில், கிறிஸ்துவ ஆராதனை பாடல்களை பாடியபடி, பாதிரியாரை அழைத்து வந்தனர். தொடர்ந்து, ஹிந்தியில் பிரார்த்தனை நடந்தது.
'வழக்கமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரார்த்தனை நடைபெற்று வந்தது. வடமாநிலத் தொழிலாளருக்கென ஹிந்தியில் பிரத்யேகமாக நடைபெறுவதில்லை. வடமாநிலத் தொழிலாளர் அதிகளவில் இருப்பதால், தற்போது, ஹிந்தியில் பிரார்த்தனை நடத்துவது அவசியமாகிறது' என்கின்றனர் சர்ச் நிர்வாகிகள்.

