sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருப்பூர் அய்யப்பன் கோவிலில்  அரவணை பாயாசம் தயாரிப்பு

/

 திருப்பூர் அய்யப்பன் கோவிலில்  அரவணை பாயாசம் தயாரிப்பு

 திருப்பூர் அய்யப்பன் கோவிலில்  அரவணை பாயாசம் தயாரிப்பு

 திருப்பூர் அய்யப்பன் கோவிலில்  அரவணை பாயாசம் தயாரிப்பு


ADDED : நவ 25, 2025 06:07 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, அய்யப்பன் கோவிலில் அரவணை பாயாசம் தயாரித்து விற்கப்படுகிறது.

கூட்டம் அதிகமாக இருக்கும் போது, அரவணை பாயாசம் தட்டுப்பாடு ஏற்படுகிறது; அதிகம் வாங்கினாலும், சுமந்து எடுத்து வர முடிவதில்லை. திருப்பூரிலேயே அரவணை பாயாசம் கிடைத்தால் பரவாயில்லை என்று, பக்தர்கள் அய்யப்பன் கோவிலில் தெரிவித்துள்ளனர். வேண்டுகோளை ஏற்று, அரவணை பாயாசம் தயாரித்து, பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:

சபரிமலையில் வழங்கப்படுவது போல், அய்யப்ப பக்த ஜனம் சார்பில், பாரம்பரிய முறைப்படி அரவணை பாயாசம் தயாரித்து, அய்யப்ப சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது; தொடர்ந்து, பக்தர்களுக்கு, 250 கிராம் அளவுக்கு பாட்டில்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பச்சரிசி, வெல்லம், சுக்கு, மிளகு, சீரகம், கொப்பரை தேங்காய், ஏலக்காய், முந்திரி ஆகிய பொருட்களை கொண்டு தயாரிக்கிறோம்.

கடந்த சில நாட்களாக, அய்யப்ப பக்தர்கள் அதிக ஆர்வமாக, அய்யப்ப சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட அரவணை பாயாசம் வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us