/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்னதான திட்டத்தில் திருத்தம் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்
/
அன்னதான திட்டத்தில் திருத்தம் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்
அன்னதான திட்டத்தில் திருத்தம் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்
அன்னதான திட்டத்தில் திருத்தம் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 16, 2025 03:52 AM
பல்லடம், : அன்னதான திட்டத்தில் திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என, கோவில் பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அதன் மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது:
தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், போதிய வருவாய் இல்லாத பல கோவில்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது.
அன்னதானத் திட்டத்தை விரிவு படுத்துகிறோம் என்ற பெயரில், குறைந்த, போதிய வருமானம் இல்லாத கோவில்கள் மற்றும் பட்டியலில் சேர்ந்த கோவில்கள் என வகைப்படுத்தி, தினமும், 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இது போன்ற கோவில்களில், சமையல் செய்யும் பணியாளர்கள் இருவருக்கான சம்பளம், மளிகை பொருட்களுக்கான செலவுகள் என, உண்டியல் வருவாய் தேவையின்றி வீணாகிறது. இல்லாவிடில், அன்னதானத்துக்கு திட்டத்தை செயல்படுத்த உபயதாரர்களை நாட வேண்டி உள்ளது.
போதிய நிதி ஆதாரம், வருவாய் இருக்கும் பட்சத்தில், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
எனவே, வருவாய் குறைந்த கோவில்களில், அன்னதானத் திட்டத்துக்கு பதில் பிரசாதங்களை வழங்கலாம். இவ்வாறு, அன்னதானத் திட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர அறநிலையத்துறை முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

