/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கோப்பை சென்சுரி பள்ளி அசத்தல்
/
முதல்வர் கோப்பை சென்சுரி பள்ளி அசத்தல்
ADDED : அக் 16, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி, கோவை நேரு மைதானத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அணி சார்பில் மாணவர் பிரிவில், சென்சுரி பள்ளி மாணவர் இர்பான், மாணவியர் பிரிவில் சாத்விகா, சம்யுக்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், சிறப்பாக விளையாடி திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவிகளையும், பயிற்சியாளர் கார்த்திக் பிரசாத்தையும், பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.