/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனிம வளக் கொள்ளை எதிர்த்து போராட்டம்'
/
'கனிம வளக் கொள்ளை எதிர்த்து போராட்டம்'
ADDED : ஏப் 24, 2025 06:37 AM

திருப்பூர்; திருப்பூர் - அவிநாசி ரோடு, காந்தி நகரை சேர்ந்த சங்கர் தலைமையில், பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து நேற்று மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: தாராபுரம் தாலுகா, நாதன்பாளையத்தில் மணல் குவாரி உரிமை சீட்டை முறைகேடாக பயன்படுத்தி, மணல் கொள்ளை நடந்துவருகிறது. உரிமம் வழங்கிய இடத்தில் குறைந்த அளவே மண் உள்ளது. உரிமம் இல்லாத இடங்களிலும் மண் அள்ளுகின்றனர். கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், கள ஆய்வு நடத்தவில்லை. காங்கயம் தாலுகா, சின்னாரிபாளையத்தில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், உரிமம் பெறாமல், கிராவல் மண் எடுக்கப்படுகிறது. இரவு பகலாக மண் திருட்டு நடக்கிறது. கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும். நடவடிக்கைகள் எடுக்காவிடில், பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்த தயாராக உள்ளோம்.

