/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
/
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க பேச்சைக் கண்டித்து, அவிநாசிபாளையத்தில் இந்து பரிவார் கூட்டமைப்பு சார்பில், கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாய் குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைச்சர் பொன்முடி உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிறுவனர் அண்ணாதுரை, பாரத அன்னையர் முன்னேற்றக் கழக தலைவர் தன்ராஜ், பாரதமாதா இந்து மக்கள் இயக்க மாநில செயலாளர் சம்பத், இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் ஈஸ்வரன், ஆட்டோ தொழிற்சங்க மண்டல தலைவர் சிவா உட்பட பலர் கலந்து உள்ளனர்.