sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊத்துக்குளி அருகே குடிநீருக்காக மறியல் 

/

ஊத்துக்குளி அருகே குடிநீருக்காக மறியல் 

ஊத்துக்குளி அருகே குடிநீருக்காக மறியல் 

ஊத்துக்குளி அருகே குடிநீருக்காக மறியல் 


ADDED : ஆக 30, 2025 01:03 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஊத்துக்குளி அருகே, முறையாக குடிநீர் வராததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்குளி ஒன்றியம், எஸ்.கத்தாங்கண்ணி ஊராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில், பாப்பம்பாளையம் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்து 10 நாட்களுக்கு மேலாகிறது.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆவேசமடைந்த அப்பகுதியினர் நேற்று காலை, ஊத்துக்குளி ரோட்டில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்குளி பி.டி.ஓ., சரவணன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினார். இதில் அப்பகுதி மா.கம்யூ., நிர்வாகிகள் பங்கேற்று குடிநீர் பிரச்னை குறித்து விளக்கினர். 'உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என பி.டி.ஓ., உறுதியளித்தார். மறியலில் ஈடுபட்டோர் சமாதானமடைந்து கலைந்தனர்.






      Dinamalar
      Follow us