sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர் சங்க கொடிகள் போலீஸ் அகற்றியதால் மறியல்

/

மாணவர் சங்க கொடிகள் போலீஸ் அகற்றியதால் மறியல்

மாணவர் சங்க கொடிகள் போலீஸ் அகற்றியதால் மறியல்

மாணவர் சங்க கொடிகள் போலீஸ் அகற்றியதால் மறியல்


ADDED : ஆக 24, 2025 06:25 AM

Google News

ADDED : ஆக 24, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : இந்திய மாணவர் சங்கத்தின், 27வது மாநில மாநாடு நேற்று முன்தினம் திருப்பூரில் துவங்கியது. முதல் நாள் ஊர்வலம், பொதுகூட்டம் நடந்தது. மாநில பிரதிநிதிகள் மாநாடு நேற்று செங்கப்பள்ளியில் துவங்கியது. இன்றும் நடக்கிறது. மாநில மாநாட்டையொட்டி திருப்பூர் நகரில் பிரதான ரோட்டில் பல இடங்களில் எஸ்.எப்.ஐ., கொடிகள் கட்டப்பட்டன.

திருப்பூர் வளர்மதி அருகே நொய்யல் பாலத்தில் கட்டப்பட்டிருந்த மாணவர் சங்கத்தின் கொடியை, மக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி போலீசார் நேற்று அகற்றினர். இதை கண்டித்த மாநாட்டு வரவேற்பு குழு நிர்வாகிகள் ஜெயபால், பாலன், மணிகண்டன், சம்பத் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படாமல், கொடியை அகற்றி ரோட்டில் வீசி சென்றதாக குற்றம்சாட்டினர். பின், கொடிகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியல் காரணமாக, வளர்மதி பஸ் ஸ்டாப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us