/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் போன் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் போன் வழங்கல்
ADDED : மார் 15, 2026 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்மார்ட் மொபைல் போன்கள் வழங்கும்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், போன் பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள் தேர்வு கடந்த வாரம் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட, 60 பேருக்கு நேற்று போன்கள் வழங்கப்பட்டன.
தலா 13,100 ரூபாய் மதிப்பிலான இந்த போன்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், பயனாளிகளுக்கு வழங்கினார்.

