sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

18 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்

/

18 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்

18 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்

18 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்


ADDED : ஜூலை 15, 2025 10:37 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கால் அளவீடு செய்யப்பட்டு, செயற்கை கால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சக் ஷம் மற்றும் சிகரம் பவுண்டேஷன் இணைந்து கடந்த மாதம் நடத்திய முகாமில், மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு கால் அளவீடு செய்யப்பட்டது. அதன்படி, செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, தென்னம்பாளையத்திலுள்ள எஸ்.பி., டெக்ஸ் நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சக் ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி, சிகரம் பவுண்டேஷன் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சக் ஷம் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம் முன்னிலை வகித்தார்.

மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு, மொத்தம், 1.11 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால் மற்றும் காலிபர் இலவசமாக வழங்கப்பட்டது. சிகரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மணி, விநாயகா தம்பி, சக் ஷம் பொறுப்பாளர்கள் முத்துரத்தினம், மாநில நிர்வாகி கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us