/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கு பஸ் இன்றி பொதுமக்கள் பரிதவிப்பு
/
கிராமங்களுக்கு பஸ் இன்றி பொதுமக்கள் பரிதவிப்பு
ADDED : ஜன 02, 2026 05:51 AM
உடுமலை: உடுமலை பகுதி கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கடைகோடி கிராமங்களுக்கு, செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டும், நின்று கொண்டும் மக்கள், மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, உடுமலை பகுதியில், கடைக்கோடி கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

