/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; நவ., மாதத்தில் சிறப்பு முகாம்கள்
/
வரும் 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; நவ., மாதத்தில் சிறப்பு முகாம்கள்
வரும் 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; நவ., மாதத்தில் சிறப்பு முகாம்கள்
வரும் 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; நவ., மாதத்தில் சிறப்பு முகாம்கள்
ADDED : அக் 09, 2024 10:11 PM
உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும், 29ல், வெளியிடப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தம், சேர்த்தல், நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் வகையில், வரும், 29ம் தேதி, வரைவு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.
வரைவு பட்டியலில் உள்ள விபரங்களை சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளலாம். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் படிவங்கள் பெற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுச்சாவடிகளுக்கு செல்லாமலேயே, https://voters.eci.gov.in என்கிற இணையதளம் வாயிலாகவும், Voter Helpline மொபைல் செயலி வாயிலாகவும், இருப்பிடத்திலேயே, ஆன்லைனிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
வரும் ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர் அனைவரும், பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.
அதே போல், பொதுமக்கள் வசதிக்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் நவ., மாதம் நான்கு விடுமுறை நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
நவ., 9, 10 மற்றும் 23, 24 தேதிகளில், ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. சுருக்கமுறை திருத்தத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜன., ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.