/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டம்' இதழ் நடத்திய வினாடி - வினா.. மத்தாப்'பூ'! மகிழ்ச்சி ததும்ப பங்கேற்ற மாணவர்கள்
/
'பட்டம்' இதழ் நடத்திய வினாடி - வினா.. மத்தாப்'பூ'! மகிழ்ச்சி ததும்ப பங்கேற்ற மாணவர்கள்
'பட்டம்' இதழ் நடத்திய வினாடி - வினா.. மத்தாப்'பூ'! மகிழ்ச்சி ததும்ப பங்கேற்ற மாணவர்கள்
'பட்டம்' இதழ் நடத்திய வினாடி - வினா.. மத்தாப்'பூ'! மகிழ்ச்சி ததும்ப பங்கேற்ற மாணவர்கள்
ADDED : அக் 22, 2024 12:12 AM

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, பரிசுகளை வெல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களின் கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும், 2018 முதல், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான வினாடி - வினா விருது, 2024 -25 போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கைகோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி இடம் பெறுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இடையே, அரையிறுதி போட்டி நடைபெறும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்படும்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.நேற்று, திருப்பூர், அங்கேரிபாளையம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
தகுதி சுற்றுக்கான போட்டியில், 142 பேர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், 'ஏ' முதல் 'எச்' வரை, ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'ஏ' அணியில் இடம்பெற்ற, 12ம் வகுப்பு மாணவி அக்ஷயா, மாணவன் பிரித்திக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபள்ளி செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், பள்ளி முதல்வர் சுமதி, உதவி தலைமையாசிரியை கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயா, உமாதேவி, வினாடி-வினா ஆசிரியை கோமதி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். மாணவர்கள் உள்ளங்களில் மத்தாப்'பூ' மகிழ்ச்சி!