/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் குறைகேட்பு கூட்டம்; தாலுகா அளவில் நடக்கிறது
/
ரேஷன் குறைகேட்பு கூட்டம்; தாலுகா அளவில் நடக்கிறது
ADDED : ஏப் 04, 2025 03:13 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
அவிநாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம், தாராபுரம் நஞ்சை தலையூர், காங்கயத்தில் ஆரத்தொழுவு, மடத்துக்குளம் காரத்தொழுவு, உடுமலையில் வேலாயுத கவுண்டன் புதுார், ஊத்துக்குளி செங்கப்பள்ளி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்; பல்லடம் சென்னியம்பாளையம் இ- சேவை மையம்; திருப்பூர் வடக்கு தாலுகா கணக்கம்பாளையம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் வேலம்பட்டி கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முகாம் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

