/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடை குறைகேட்பு மாவட்டம் முழுதும் நடக்கிறது
/
ரேஷன் கடை குறைகேட்பு மாவட்டம் முழுதும் நடக்கிறது
ADDED : அக் 07, 2025 11:53 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் கடை குறைகேட்பு கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.
அவிநாசி தாலுகாவில் தெக்கலுார், தாராபுரம் - கெத்தல்ரேவ், காங்கயம் - கவுண்டம்பாளையம், மடத்துக்குளம் - பாப்பாங்குளம், பல்லடம் - கோடங்கிபாளையம், திருப்பூர் வடக்கு தாலுகா - செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு தாலுகா - கண்டியன் கோவில், உடுமலை - வடுகபாளையம், ஊத்துக்குளி - மொரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள தொடக்க வேளாண்கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.