ADDED : டிச 17, 2024 05:54 AM

திருப்பூர்; நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த மாதம் 11.2 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த பிப்., மாதம் முதல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த நவ., மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 9,460 கோடி ரூபாய்க்கு நடந்தது. கடந்த ஆண்டு நவ., மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 11.2 சதவீதம் அதிகம்.
இந்த நிதியாண்டின், ஏப்., முதல் நவ., மாதம் வரையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி 82, 509 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12.9 சதவீதம் அதிகம்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தென் பிராந்திய தலைவர் சக்திவேல் கூறுகையில்,ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், திருப்பூர் 40,000 கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை நிச்சயம் எட்டும்' என்றார்.