/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!
/
'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!
'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!
'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!
ADDED : பிப் 19, 2024 12:43 AM
திருப்பூர் உள்ளூர்த் திட்டக்குழுமம் சிறப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை செயல்படுத்தப்பட்டால், இப்பகுதி சிறக்கும் என்பது உறுதி.
3 ரிங் ரோடுகள்
முக்கிய நகரப்பகுதிகளை இணைக்கும், 'ரிங்' ரோடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமுருகன்பூண்டி, ஆண்டிபாளையம், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல் பகுதிகளை இணைக்கும் 'ரிங்' ரோட்டை, 60 அடி ரோடாக உயர்த்துவது; சுள்ளிக்காடு, அவிநாசி, கவுண்டம்பாளையம், பொல்லிக்காளிபாளையம் பகுதிகளை இணைக்கும், 150 அடி அகல ரிங் ரோடு அமைப்பது; செங்கப்பள்ளி, தெக்கலுார், சித்தம்பலம், அவிநாசிபாளையம் பகுதிகளை இணைக்கும், 100 அடி ரிங் ரோடு ஆகிய மூன்று ரிங் ரோடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரோட்டின் இருபுறமும், நடைபாதை ரோடுகளும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரோடு விரிவாக்கம்
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (எண்:81), அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை (எண்:381) ரோடுகள்.
மாநில நெடுஞ்சாலை ரோடுகள்: அவிநாசி - பொள்ளாச்சி, திருப்பூர் - விஜயமங்கலம், திருப்பூர் - மேட்டூர், அவிநாசி - மேட்டுப்பாளையம், காங்கயம் - கோபி, பல்லடம் - உடுமலை, பல்லடம் - கோவை, அவிநாசி - பல்லடம், அன்னுார் - காமநாயக்கன்பாளையம், திருப்பூர் -சோமனுார், பல்லடம் - காரப்பாளையம், திருப்பூர் - படியூர், காரப்பாளையம் - தாராபுரம், திருப்பூர் - பெருந்துறை ஆகிய ரோடுகளை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சரக்கு முனையங்கள்
நகரின் சரக்கு வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில், ரிங் ரோடுகள் மார்க்கமாக, நான்கு இடங்களில், சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். அதன்படி, அக்ரஹார பெரியபாளையம், பொல்லிக்காளிபாளையம், நேதாஜி ஆயத்த ஆடைப்பூங்கா, வஞ்சிபாளையம் பகுதிகளில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறு பஸ் ஸ்டாண்ட்
உள்ளூர் திட்டக்குழுமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்ரஹார பெரியபாளையம், வீரபாண்டி பிரிவு, குளத்துப்புதுாரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், கோவில்வழியில், பஸ் டிப்போ அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்வே ஸ்டேஷன்
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோவை - சேலம் ரயில்வே வழித்தடத்தில், புறநகர் போக்குவரத்து அமைப்பை சாத்தியமாக்கும் வகையில், புதிதாக மண்ணரை, சிறுபூலுவபட்டி ஆகிய இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பாலங்கள்
கூடுதலாக, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலங்கள், ஐந்து ரோடுகளில், மேம்பாலம்; 13 ரோடுகளில், கீழ்பாலங்களை விரிவுபடுத்துதல், ஆகிய பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

