sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளிகளில் முடங்கிய செஞ்சிலுவை சங்கம்; நிதிஒதுக்கீடு இல்லாததால் அவலம்

/

அரசு பள்ளிகளில் முடங்கிய செஞ்சிலுவை சங்கம்; நிதிஒதுக்கீடு இல்லாததால் அவலம்

அரசு பள்ளிகளில் முடங்கிய செஞ்சிலுவை சங்கம்; நிதிஒதுக்கீடு இல்லாததால் அவலம்

அரசு பள்ளிகளில் முடங்கிய செஞ்சிலுவை சங்கம்; நிதிஒதுக்கீடு இல்லாததால் அவலம்


ADDED : டிச 04, 2024 10:10 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் செஞ்சிலுவை சங்கங்களை, அடுத்தடுத்த நிலைக்கு மேம்படுத்த, அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாமல், திட்டம் துவக்கப்பட்டதன் நோக்கம் வீணாகிறது.

மாணவர்களுக்கு நற்பண்புகளை மேம்படுத்த, பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம், நாட்டுநலப்பணி திட்டம், பசுமைப்படை, ஜே.ஆர்.சி., எனப்படும் இளம் செஞ்சிலுவை சங்கம் செயல்படுத்தப்படுகிறது.

ஆபத்து காலத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, ரத்த தானம், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது, விபத்துகளின்போது முதலுதவி செய்வது குறித்தும் பயிற்சி அளிப்பது தான் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளாக உள்ளன.

அனைத்து பள்ளிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வாயிலாக, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், இத்திட்டத்துக்கான நிதியை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

விருப்பமுள்ள பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து அரசு பள்ளிகளில் கட்டாயம், இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதற்கேற்ப, பள்ளிகளில், திட்டத்தை துவக்கியுள்ளனர். ஆனால், அத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கென இதுவரை, அரசின் சார்பில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

நிதி ஒதுக்கீடு இல்லாமல் முறையான எந்த பயிற்சிகளும், நிகழ்ச்சிகளும் செஞ்சிலுவை சங்கத்தில் நடப்பதில்லை. சில பள்ளிகளில் விருப்பமிருந்தாலும், நிதியில்லாமல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

திட்டத்தை முழுமையாக பள்ளிகளில் செயல்படுத்த, அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென, பள்ளி ஆசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us