sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறு - சிறு நிறுவனங்கள் 'உத்யம்' பதிவு அவசியம் !

/

குறு - சிறு நிறுவனங்கள் 'உத்யம்' பதிவு அவசியம் !

குறு - சிறு நிறுவனங்கள் 'உத்யம்' பதிவு அவசியம் !

குறு - சிறு நிறுவனங்கள் 'உத்யம்' பதிவு அவசியம் !


ADDED : ஜன 30, 2025 07:21 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. தொழில் பாதுகாப்புக்குழு மேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் தாரிக் பேசியதாவது:

அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோரும், தங்கள் நிறுவனங்களை 'உத்யம்' போர்ட்டலில் பதிவு செய்து சான்றுபெற்றுக்கொள்ளவேண்டும். 'உத்யம்' பதிவு செய்தால்தான் மானியங்கள், தொழில் கடன்கள் பெற முடியும். கலைஞர் கைவினை திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் வரை பிணையமில்லாத கடனுதவி, 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம், 5 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயனாளியாக விரும்பும் தொழில்முனைவோர், msmeonline.tn.gov.in என்கிற இணையதளத்தில், விண்ணப்பிக்கவேண்டும். புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்), வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம், பி.எம்.இ.ஜி.பி., எனப்படும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என, ஏராளமான அரசு திட்டங்கள் உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us