sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மலை கிராமத்தில் இடியும் வீடுகளை புதுப்பியுங்க!

/

மலை கிராமத்தில் இடியும் வீடுகளை புதுப்பியுங்க!

மலை கிராமத்தில் இடியும் வீடுகளை புதுப்பியுங்க!

மலை கிராமத்தில் இடியும் வீடுகளை புதுப்பியுங்க!


ADDED : டிச 03, 2024 06:25 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; ஈசல் திட்டு மலை கிராமத்தில், இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளை புதுப்பிக்க அரசு உதவ வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் உள்ளன. இதில், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஈசல்திட்டு மலை கிராமம் உள்ளது.

அங்கு வசிக்கும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஈசல்திட்டு கிராமத்தில் மண் சுவரில், மேற்கூரையாக தகர ஷீட் அமைத்து அவ்வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்தாண்டு பெய்த கனமழைக்கு, பெரும்பாலான வீடுகள் பாதிக்கப்பட்டன. பலத்த காற்றுக்கு மேற்கூரையும், தொடர் மழையினால் சுவர்களும் இடிந்தது. வீடுகளை புதுப்பிக்க எவ்வித வசதிகளும் இல்லாததால், நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் சிறப்புத்திட்டத்தில், புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குடியிருப்புக்கு வழங்கப்பட்ட சோலார் தெருவிளக்குகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதால், அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.

வீடுகளுக்கும், குடியிருப்புகளுக்கும் புதிதாக சோலார் பேனல்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறையினரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us