sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீரமைப்பு பணி மேம்படுத்தினாலே பயன்!

/

சீரமைப்பு பணி மேம்படுத்தினாலே பயன்!

சீரமைப்பு பணி மேம்படுத்தினாலே பயன்!

சீரமைப்பு பணி மேம்படுத்தினாலே பயன்!


ADDED : பிப் 10, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் நகராட்சி, சின்ன வடுகபாளையம் குட்டை, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.50 கோடி ரூபாய் மதிப் பில் புனரமைக்கப்பட்டது.

குட்டை முழுவதுமாக துார்வாரப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பயன்பாட்டுக்கு விடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில், மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

பொதுமக்கள் கூறியதாவது:

நீராதார குட்டை துார்வாருவது வரவேற்கத்தக்கது. ஆனால், வெறும், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக, 3.50 கோடி ரூபாய் வீணாக்கியது ஏற்புடையதல்ல. இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில், குட்டையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் இருக்கைகள் அமைப்பதுடன், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அமைக்க வேண்டும். எனவேதான், வெறும் நடைபயிற்சிக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு பூங்காவாகவும் இது பயன்படும். எனவே, நடைப்பயிற்சி பாதையை பராமரித்து, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல்லடம் நகராட்சி பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு பொழுதுபோக்கு பூங்காக்கள் கிடையாது. தனியார் வாயிலாக பராமரிக்கப்படும் வனாலயம் பூங்கா நகரப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

எனவே, 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட குட்டையை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப மேம்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us