/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா
/
கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா
ADDED : ஜன 27, 2025 02:25 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தின விழா நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த மாநகர, மாவட்ட போலீசார் 58 பேருக்கு முதல்வர் பதக்கம்; 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பில் நலத்-திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்-டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், தேசியக்கொடி ஏற்றினார். பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.ஆயுதப்படை எஸ்.ஐ., மகேந்திரன், கமாண்டராக வாள் ஏந்தி வந்து, படையினரை பார்வையிட, கலெக்டருக்கு அழைப்புவி-டுத்தார்.
மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த ஜீப்பில், கலெக்டர் மற்றும் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர், போலீஸ், என்.சி.சி., படையை பார்வையிட்டனர். துப்பாக்கி ஏந்தியபடி, போலீசார் கம்பீர அணிவகுப்பு நடத்தினர். சமாதானத்தை வலியு-றுத்தும் வகையில் புறா, மூவர்ண பலுான் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.
சிறப்பாக பணிபுரிந்த மாநகர போலீசார் 23 பேர்; மாவட்ட போலீசார் 35 பேர் என, 58 பேருக்கு முதலமைச்சர் பதக்கம்; போலீஸ் உள்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்ள், தன்னார்வலர்ள் என, 210 பேருக்கு பாராட்டுச்-சான்று வழங்கப்பட்டது. விழா நிறைவாக நடந்ச கலை நிகழ்ச்சி-களில், அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவியர், 900 பேர் தேசப்பற்று பாடல்களுக்கு நடனமாடினர்.

