sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தற்காலிக இரவு காவலர்கள் பள்ளிக்கு நியமிக்க கோரிக்கை

/

தற்காலிக இரவு காவலர்கள் பள்ளிக்கு நியமிக்க கோரிக்கை

தற்காலிக இரவு காவலர்கள் பள்ளிக்கு நியமிக்க கோரிக்கை

தற்காலிக இரவு காவலர்கள் பள்ளிக்கு நியமிக்க கோரிக்கை


ADDED : செப் 07, 2025 09:11 PM

Google News

ADDED : செப் 07, 2025 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அரசு பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நுாற்றுக்கும் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன.

அரசு பள்ளிகளில் இரவு காவலர் பணியிடங்களை பல ஆண்டுகளாக நிரப்பவில்லை.

இதனால், பள்ளியின் பாதுகாப்புக்கும் எந்த உறுதியும் இல்லாத நிலைதான் தொடர்கிறது.

சில பள்ளிகளில், நிர்வாகத்தினர் தற்காலிகமாக இரவு காவலர்களை நியமித்துள்ளனர். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் இந்நிலை சாத்தியமில்லாமல் உள்ளது.

அரசு பள்ளிகளில் தற்போது, உயர்ரக தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறிவருகிறது.

ஆனால், கட்டமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.

எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், இடைவெளியில் மாணவர்கள் வெளியில் சென்று வந்தாலும் ஆசிரியர்களால் கண்காணிக்க முடிவதில்லை.

இதனால், தற்காலிமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளாட்சி துறைகளின் வாயிலாக இரவு காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி ஆர்வலர்களும், பெற்றோரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us