sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழாய் வழியாக பி.ஏ.பி., பாசன திட்டம் கொண்டு வர கோரிக்கை

/

குழாய் வழியாக பி.ஏ.பி., பாசன திட்டம் கொண்டு வர கோரிக்கை

குழாய் வழியாக பி.ஏ.பி., பாசன திட்டம் கொண்டு வர கோரிக்கை

குழாய் வழியாக பி.ஏ.பி., பாசன திட்டம் கொண்டு வர கோரிக்கை


ADDED : ஜன 11, 2025 09:38 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : 'பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்பாசனத்தில் குழாய் வழியாக நீர் கொண்டு வரும் வகையில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்' என, விவசாயிகள் வற்புறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., வெள்ளக்கோவில் (காங்கயம் - வெள்ளகோவில்) கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, மத்திய நீர்வள ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். அவர்கூறியதாவது:

காமராஜர் ஆட்சியில் பி.ஏ.பி., கால்வாய், சிமென்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயில் குப்பைக் கொட்டுவது, கால்வாயில் வரும் நீரை திருடி, விவசாயம் அல்லாத வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்னைகளால், பெருமளவு நீரிழப்பு ஏற்படுகிறது.

தற்போது, 5,000 கோடி ரூபாய் செலவில் கால்வாயை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதுபோன்ற புரனமைப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு இனி மேல் கிடைக்காது. எனவே, தொலை நோக்கு திட்டத்துடன், பணி மேற்கொள்ள வேண்டும்.

திறந்தவெளி கால்வாயை புனரமைப்புக்கு பதிலாக, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் போன்று குழாய் வழியாக, நீர் வினியோகிக்கும் வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும் என, மாநில நீர்வளத்துறை மற்றும் மத்திய நீர் வள ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

அதற்கு விளக்கமளித்து மத்திய நீர் வள ஆணையம், 'பி.ஏ.பி., வாய்க்கால் புனரமைப்பு தொடர்பான திட்ட அறிக்கை தங்களுக்கு வரவில்லை. இப்பணியை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும். தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us