/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 08, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக ஐந்து ரயில்கள் செல்கின்றன. இவற்றில் நுாற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர்.
இங்கு சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், பயணியரின் பாதுகாப்பு கருதியும் கண்காணிப்பு கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே மற்றும் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.