sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

/

உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 12, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு செல்வர். அப்போது தற்போது இருக்கும் ரயில்களில் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, உடுமலை வழியாக, ராமேஸ்வரம், துாத்துக்குடி, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us