/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனை மரங்களை பாதுகாக்க கோரிக்கை
/
பனை மரங்களை பாதுகாக்க கோரிக்கை
ADDED : டிச 27, 2025 06:20 AM
உடுமலை: நீர்நிலை கரைகளிலுள்ள பனை மரங்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், திருப்பூர் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி, கடந்த, 2018--19ம் ஆண்டில், நீர்நிலை கரைகளில், பனை விதை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஊராட்சிகள் வாயிலாக பனை விதைகள் வினியோகம் செய்து, நீர்நிலைகளின் கரைகளில் நடவு செய்யப்பட்டது.
தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், பெரும்பாலான விதைகள் முளைக்கவில்லை. குறைந்தளவு முளை விட்டு, வளர்ச்சி தருணத்திலுள்ள பனை மரங்களும், பராமரிப்பின்றி தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.
குளத்தின் கரைகள் முழுவதும் புதர் மண்டி காணப்படுவதுடன், பல்வேறு களைச்செடிகள் மற்றும் மரங்களின் ஆக்கிரமிப்பால், வளர்ந்து வரும் பனை மரங்கள் இருப்பதே தெரியவில்லை.
மேலும், நீர்நிலை கரையில், குப்பையை குவித்து தீ வைத்து எரிப்பதால், பனை மரங்கள் கருகும் அவல நிலை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து பனை மரங்களை பாதுகாக்க வேண்டுமென, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

