sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெரிசல் பகுதியில் ஆம்னி நிறுத்தம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

நெரிசல் பகுதியில் ஆம்னி நிறுத்தம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெரிசல் பகுதியில் ஆம்னி நிறுத்தம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெரிசல் பகுதியில் ஆம்னி நிறுத்தம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : டிச 24, 2024 10:17 PM

Google News

ADDED : டிச 24, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், நெரிசல் மிகுந்த பகுதியில், 'ஆம்னி' பஸ்களை நிறுத்தும் பிரச்னையால், வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக பழநி ரோட்டில், இணையும் பை-பாஸ் ரோடு குறுகலாக உள்ளது.

இந்த ரோட்டில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உட்பட வழித்தட பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நுழையும் நுழைவாயில் பகுதி அமைந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பை-பாஸ் ரோடு வழியாகவே சென்று, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைய வேண்டும். இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.

இந்நிலையில், உடுமலையில் இருந்து சென்னை உட்பட தொலைதுார பகுதிகளுக்கு, 25க்கும் அதிகமான 'ஆம்னி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும், இரவு, 8:00 மணிக்கு மேல், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலை ஒட்டி, பை-பாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், இந்த ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.இப்பிரச்னைக்கான தீர்வு குறித்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us