sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை

/

சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை

சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை

சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கோரிக்கை


ADDED : டிச 16, 2024 07:36 PM

Google News

ADDED : டிச 16, 2024 07:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

கிராம ஊராட்சிகளில், பயன்பாடில்லாத சுகாதார வளாக கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்தென சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான ஊராட்சிகளில், சுகாதார வளாகம் முழுவதும் புதர் படிந்த பகுதிகளிலும், பயன்பாடில்லாமல், சேதமடைந்த கட்டடமாகவும் உள்ளன.

கிராம ஊராட்சிகளில் தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் இருப்பினும், பலரும் பொதுசுகாதார வளாகத்தை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அந்த கட்டடங்கள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, சேதமான சுகாதார வளாகங்களை புதுபித்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கு அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், பல ஊராட்சிகளில் சுகாதார வளாகங்கள் புதர் மண்டிய இடங்களிலும், தண்ணீர் வசதி இல்லாத வளாகங்களாகவும் தான் உள்ளன. இவற்றை ஊராட்சி நிர்வாகங்களும் கண்டு கொள்ளாமல் உள்ளன.

கிராமங்களின் சுகாதார வளாகங்களை புதுப்பிக்கவும், பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us