ADDED : ஜன 26, 2024 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;வெள்ளகோவில், மூலனுார் ரோடு, எஸ்.கே., பாளையத்தில் செங்கல் சூளை அருகே பெண் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி வருவதாக அன்பு தேசம் அறக்கட்டளையினருக்கு தகவல் கிடைத்தது.
அறக்கட்டளை நிர்வாகிகள், வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சென்று மீட்டனர். வனத்துறை அறிவுறுத்தலின் பேரில், வெள்ளகோவில் கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

