/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை கூட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை கூட்டம்
ADDED : ஜன 07, 2025 02:06 AM
உடுமலை, ; தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், உடுமலை வட்டகிளைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுதல், குறிப்பிட்ட வயது நிறைவு பெற்றவுடன் ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், கம்ப்யூடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை குறைத்தல், மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் துணைத்தலைவர்கள், செயலாளர்கள் உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். சங்க பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.