/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 18, 2025 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
உடுமலை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அலுவலக கட்டடத்தில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ராமதாஸ் வரவேற்றார். தலைவர் மணி தலைமை வகித்து, சங்க வளர்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் குறித்து பேசினார். செயலாளர் அழகர்சாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு அறிக்கைகளை வாசித்தார். காப்பீட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்க துணைச்செயலாளர் சிவராஜ் நன்றி தெரிவித்தார்.