sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரிங் ரோடா... பசுமை வழி சாலையா? பல்லடத்தில் மக்கள் குழப்பம்

/

ரிங் ரோடா... பசுமை வழி சாலையா? பல்லடத்தில் மக்கள் குழப்பம்

ரிங் ரோடா... பசுமை வழி சாலையா? பல்லடத்தில் மக்கள் குழப்பம்

ரிங் ரோடா... பசுமை வழி சாலையா? பல்லடத்தில் மக்கள் குழப்பம்


ADDED : மார் 07, 2025 03:36 AM

Google News

ADDED : மார் 07, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை, கொச்சி, அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் இணைகின்றன.

இதனால், பல்லடம் நகரப் பகுதியில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நெரிசலை குறைக்க, அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருக்க, புறவழிச்சாலை அமைந்தால்தான், நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்ற பேச்சும் உள்ளது.

பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன், கரூர்- - கோவை பசுமைவழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதேபோல், காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை 'ரிங்' ரோடு அமைக்க, கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நில அளவீடு பணிகளும் நடந்து வந்தன. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பணிகள் கைவிடப்பட்டன. இத்திட்டம் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் செல்வதாக கூறி, ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டது.

பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஏதாவது ஒரு திட்டம் அமல்படுத்தப்படாதா? என, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே, பசுமைவழிச் சாலை, 'ரிங்' ரோடு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், வெள்ளக்கோவில் முதல் காரணம்பேட்டை வரை, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், வாகன நெரிசல் போக்குவரத்து நெரிசல் இன்னும் குறைந்ததாக இல்லை. இவ்வாறு இருக்க, தற்போது, புதிதாக 'ரிங்' ரோடு அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில் அரசு கூறுகையில், ''பல்லடம்- - கொச்சி ரோட்டில் இருந்து, மாதப்பூர் வரை, 7.50 கி.மீ., தூரம் 'ரிங்' ரோடு அமைக்க முதல் கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை, கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறோம். ஆய்வுப் பணி முடிந்து ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

---

பல்லடத்தில் 'ரிங்' ரோடு அமைக்க, வாகன கணக்கெடுப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

பொதுமக்கள் குழப்பம்

கரூர் -- கோவை பசுமைவழிச் சாலை, பல்லடத்தின் தெற்கு பகுதியில் அமைக்க திட்டம் உள்ளது. இதற்கிடையே, இதே தெற்கு பகுதியில், புதிய 'ரிங்' ரோடு அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. எனவே, இப்பகுதியில், புறவழிச் சாலை வருமா அல்லது 'ரிங்' ரோடு அமையுமா, என்பதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 'ரிங்' ரோடு என்ன ஆனது என்பதும் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்று பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.








      Dinamalar
      Follow us