/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் முன் விபத்து ஏற்படும் அபாயம்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் முன் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மார் 26, 2025 11:36 PM

திருப்பூர்; திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால், பஸ்கள் வேகமெடுத்துள்ளன. விபத்து அபாயம் உருவாகியுள்ளது.
திருப்பூர் - பெருமாநல்லுார் ரோடு பணி சமீபத்தில் நடந்தது. மெயின் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை முன்பகுதியில் சீரமைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
இதனால், பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் வேகமாக செல்கின்றன; விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் முன்வந்து பஸ் ஸ்டாண்ட் முன் வேகத்தடை உடனே அமைக்க வேண்டும்; விபத்து ஏற்படும் முன், பஸ்கள் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.