/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 18, 2024 08:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், தமிழ்நாடு முதுகெலும்பு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உடுமலையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு இச்சங்கத்தலைவர் லலித்குமார் தலைமை வகித்தார். முதுகெலும்பு மறுவாழ்வு மைய உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னார்வலர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பை பின்பற்றுவதன் முக்கியத்துவம், விதிமுறைகளை கடைபிடிப்பது, விபத்துகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.