/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு அகலப்படுத்தும் பணி : அதிகாரிகள் குழு ஆய்வு
/
ரோடு அகலப்படுத்தும் பணி : அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : ஜன 10, 2026 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - எலையமுத்துார் ரோடு, மாவட்ட இதர சாலை பிரிவில் பராமரிக்கப்படுகிறது.
இந்த ரோட்டில், 5வது கி.மீ.,ல் இருந்து, 6.6 கி.மீ., வரை, மேம்படுத்த, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 84 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டில், ஒரு வழித்தடத்தை இடைவழித்தடமாக அகலப்படுத்தி, உறுதிபடுத்தி சிறு பாலம் கட்டுதல் பணி நடக்கிறது. இப் பணிகளை திருப்பூர் தரக்கட்டுப்பாடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் கணேசன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

