
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி 60வது வார்டு, சேரன் நகர், புதுப்பிள்ளையார் நகர், அரசு காலனி பகுதி மண் சாலைகள், குண்டும் குழியுமாக உள்ளது.
தார் சாலை அமைத்து தரக்கோரி, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அப்பகுதிகளில், சிறப்பு நிதி 2025 - 26ல், தார் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது. சேரன் நகர், புதுப்பிள்ளையார் நகர், அரசு காலனி பகுதிகளில், ரூ.1.96 கோடி மதிப்பீட்டில், பல்வேறு ரோடு பணிகளை, கவுன்சிலர் கோமதி குமார் நேற்று துவக்கிவைத்தார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

