ADDED : அக் 16, 2024 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கை விளக்க போராட்டம், கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.
கோட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி உள்ளிட்டோர் பேசினர். கோட்ட செயலாளர் ராமன், கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழக அரசு, நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.