sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காய்கறி மாலை அணிந்து சாலையோர வியாபாரிகள் மனு

/

காய்கறி மாலை அணிந்து சாலையோர வியாபாரிகள் மனு

காய்கறி மாலை அணிந்து சாலையோர வியாபாரிகள் மனு

காய்கறி மாலை அணிந்து சாலையோர வியாபாரிகள் மனு


ADDED : ஜூலை 18, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்க கோரி, சாலையோர வியாபாரிகள், காய்கறிகளை மாலையாக அணிந்துவந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முறையிட்டனர்.

கொங்கு வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் ரோட்டோர வியாபாரிகள், காய்கறிகளை மாலையாக அணிந்து, வந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

அவர்கள் கொடுத்த மனு:

குறு, சிறு சாலையோர வியாபாரிகளுக்கு, தமிழக அரசின், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், சாலையோர வியாபாரிகளாக உள்ளனர்; அனைவருக்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, வாடகை வீட்டில் வசித்து வரும், வியாபாரிகளுக்கு, நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடு வழங்க வேண்டும். வியாபாரம் செய்ய ஏதுவாக, தள்ளுவண்டி வழங்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us