sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு ; பொங்கல் பண்டிகையால் விலை உயர்வு

/

சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு ; பொங்கல் பண்டிகையால் விலை உயர்வு

சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு ; பொங்கல் பண்டிகையால் விலை உயர்வு

சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு ; பொங்கல் பண்டிகையால் விலை உயர்வு


ADDED : டிச 09, 2024 10:50 PM

Google News

ADDED : டிச 09, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சந்தையில், பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் வகையில், கட்டுச்சேவல் விற்பனை அதிகரித்ததோடு, விலையும் உயர்ந்து காணப்பட்டது.

உடுமலை சந்தையில், திங்கள் தோறும், காலை ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு சேவல் சண்டைக்கு தயார் செய்யும் வகையில், நேற்றைய சந்தைக்கு நுாற்றுக்கணக்கான சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. சேவல்களுக்கு ஏற்ப, 2 ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டுச்சேவல்கள் விற்பனையானது.

அதே போல், நாட்டுக்கோழி மற்றும் ஆடு விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள் கூறியதாவது:

கிராமங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, பெரும்பாலான கிராமங்களில், சேவல் சண்டைகள் நடக்கும். அதற்கு தயாராகும் வகையில், சேவல்களை விலைக்கு வாங்கி, ஒரு மாதம் பயிற்சியளித்து, பயன்படுத்துவார்கள்.

அதனால், நேற்றைய சந்தைக்கு, அதிகளவு சேவல்கள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக, சேவல்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us